தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 4, 2020, 12:11 PM IST

Updated : Jan 4, 2020, 1:09 PM IST

ETV Bharat / international

இந்தியாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு காரணம் சுலைமானி - ட்ரம்ப்

வாசிங்டன்: ஈரான் ராணுவ தளபதி குவாசிம் சுலைமானிதான் இந்தியாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Trump
Trump

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நேரடி உத்தரவின் பேரில் அந்நாட்டின் பாதுகாப்புப் படையினர் ஈராக்கில் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் நாட்டு ராணுவத் தளபதி குவாசிம் சுலைமானி உயிரிழந்தார். ஈரான் அமெரிக்காவுக்கு இடையே நீண்ட நாள்களாக நடைபெற்றுவந்த மோதல் போக்கு, தற்போது நேரடிப் போராக மாறும் அபாயத்தை இந்தத் தாக்குதல் உருவாக்கியுள்ளது.

அமெரிக்காவின் இந்தச் செயலால், அமெரிக்கா ஈரான் மட்டுமல்லாமல், ஈராக், இஸ்ரேல், சிரியா, சவுதி அரேபியா என ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியமும் பதற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "சமீபத்தில் ஈராக்கில் அமெரிக்காவின் படைகள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது. இதில், ஒரு அமெரிக்கர் உயிரிழந்தார். நால்வர் படுகாயம் அடைந்தனர். குவாசிம் சுலைமானியின் உத்தரவைத் தொடர்ந்துதான், பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது.

இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு சுலைமானியே காரணம். அவர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களை நினைவில் கொள்வோம். சுலைமானியின் பயங்கரவாத ஆட்சி முடிவுக்கு வந்துள்ளதை நினைத்து ஆறுதல் கொள்வோம்.

மத்திய கிழக்கு நாடுகளின் ஸ்திரத்தன்மையை கெடுக்க சுலைமானி தொடர்ந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுவந்தார். அவரை முன்னதாகவே கொன்று இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் அப்பாவி மக்களின் உயிரை காப்பாற்றி இருக்கலாம். சுலைமானி கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் போரை நோக்கி இட்டுச் செல்லாது" என்றார்.

இதையும் படிங்க: சூடு தணிவதற்குள் அமெரிக்கா மற்றுமொரு தாக்குதல் !

Last Updated : Jan 4, 2020, 1:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details