உலகமே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று நவம்பர் 3 நடைபெற்றது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகிறது. 270 நம்பரை பிடிக்கப்போவது யார் என உலகமே ஆவலோடு காத்திருக்கிறது. அதிபர் ட்ரம்பும் எதிர்கட்சி வேட்பாளர் ஜோ பிடனும் நெருக்கமான வாக்கு வித்தியாசத்தில் இருந்து வருகின்றனர்
இந்நிலையில், டெல் அவேர் பகுதியில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட திருநங்கை ஒருவர் தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக செனட் சபை உறுப்பினராகியுள்ளார். வழக்கறிஞரான 31 வயதாகும் திருநங்கை சாரா மெக் பிரைட், எல்.ஜி.பீ.டி.கியூ உரிமைகளுக்காக போராடியுள்ளார்.