சர்வதேச அளவில் கோவிட்-19 பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளில் கரோனா உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
இந்தச் சூழலில், கரோனா பரவலுக்கு எதிராக போராடும் வகையில் பொது இடங்களில் முகக்கவசங்கள் அணிவதைத் தடை செய்யும் மசோதாவை பனாமா நாட்டிலுள்ள ’குண யால’ என்றழைக்கப்படும் ஓர் இனக்குழு மக்கள் நிறைவேற்றியுள்ளனர். இச்சட்டத்தின் மூலம் குண யால மக்கள் வசிக்கும் பள்ளி, அரசு அலுவலங்கள் ஆகியவற்றில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசங்கள் அணியத் தேவையில்லை.
பனாமா நாட்டிலுள்ள சிறு தீவுகளில் வாழும் மக்களுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.