தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 15, 2020, 4:57 PM IST

ETV Bharat / international

'2021ஆம் ஆண்டு மிகவும் மோசமானதாக இருக்கும்'

2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021ஆம் ஆண்டு மிகவும் மோசமானதாக இருக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச உணவுத் திட்டத்தின் நிர்வாக இயக்குநர் டேவிட் பீஸ்லி தெரிவித்துள்ளார்.

Nobel UN agency
Nobel UN agency

இது குறித்து ஐ.நா.வின் சர்வதேச உணவுத் திட்டத்தின் இயக்குநர் டேவிட் பீஸ்லி அளித்துள்ள பேட்டியில், "சர்வதேச அளவில் நடைபெறும் மோதல்கள், பேரழிவுகள் மற்றும் அகதிகள் முகாம்களில் மேற்கொள்ளப்படும் பணிகள் ஆகியவற்றை நோபல் குழு தொடர்ந்து கவனித்து வருகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல், கரோனா உள்ளிட்டவை காரணமாக சர்வதேச அளவில் பஞ்சம் குறித்த செய்திகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல சிரமமாக உள்ளது.

மேலும், கரோனா ஊரடங்கால் இரண்டாம் மற்றும் மூன்றாம் தர நாடுகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவர சர்வதேச நாடுகள் பல்வேறு பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களை அறிவித்து வருகின்றன.

இந்த ஊக்குவிப்புத் திட்டங்கள் காரணமாகவே 2020ஆம் ஆண்டு நம்மால் உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க முடிந்தது. ஆனால், அடுத்தாண்டு இதே நிலை நீடிக்காது. பல்வேறு உலக நாடுகளும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ளத் தொடங்கும்.

சர்வதேச நாடுகளிடம் நிதி இருக்காது. இதனால் 2021ஆம் ஆண்டு தற்போதுள்ளதைவிட மிகவும் மோசமானதாக இருக்கும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: ஆய்வு மாதிரிகளை உலக நாடுகளுடன் பகிர்வது அவசியமாகிறது

ABOUT THE AUTHOR

...view details