தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 30, 2020, 7:09 PM IST

ETV Bharat / international

அவரச அனுமதி கோரி விண்ணப்பித்துள்ள மாடர்னா

வாஷிங்டன்: அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் அவசர அனுமதி கோரி விண்ணப்பிக்க உள்ளதாக மாடர்னா நிறுவனம் அறிவித்துள்ளது.

Moderna
Moderna

கரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணிகளில் உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர். அதன்படி மாடர்னா நிறுவனம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்து 94.5 விழுக்காடு பலனளிப்பதாக அந்நிறுவனம் நவம்பர் இரண்டாம் வாரம் அறிவித்தது.

இந்நிலையில், மூன்றாம்கட்ட மருத்துவ சோதனை முடிவுகள் நம்பிக்கையளிக்கும் வகையில் உள்ளதால் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் அவசர அனுமதிகோரி விண்ணப்பிக்க உள்ளதாக மாடர்னா நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் தால் ஜாக்ஸ் கூறுகையில், "இந்தத் தகவல்கள் வலுவானவை என்று நாங்கள் நம்புகிறோம். அமெரிக்காவில் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை பெற இது போதுமானதாக இருக்க வேண்டும். மேலும், சர்வதேச அங்கீகாரத்திற்கும் இதுபோதும் என்றே நாங்கள் நம்புகிறோம் "என்றார்.

அமெரிக்க நிறுவனங்களான மாடர்னா, ஃபைஸர் ஆகிய இரு நிறுவனங்களும் அவரச கால அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளன. இதனால் டிசம்பர் மாதமே அமெரிக்கர்களுக்கு தடுப்பு மருந்து அளிக்கும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட மாட்ரனா நிறுவனத்தின் மூன்றாம்கட்ட சோதனையில் இதுவரை 196 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 11 பேர் மட்டுமே உண்மையான தடுப்பு மருந்தை பெற்றவர்கள். கடுமையாக பாதிக்கப்பட்ட ஒருவர், உயிரிழந்த மற்றொருவர் என மற்ற 30 பேர் டம்மி மருந்தை பெற்றவர்கள்.

தால் ஜாக்ஸ் மேலும் கூறுகையில், "நாங்கள் ஏற்கனவே, சோதனையில் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளோம். இந்த தடுப்பு மருந்து மக்களுக்கு அளிக்கப்படால் கோடிக்கணக்கானோரை காப்பாற்ற முடியும்" என்றார்

இதையும் படிங்க: கரோனா பாதிப்புக்குள்ளான விஞ்ஞானிகளை மீட்டு வந்த விமானப்படை!

ABOUT THE AUTHOR

...view details