2020ஆம் ஆண்டையே புரட்டிப்போட்ட கரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் முயன்றுவருகின்றனர். கடந்த வாரம், ஃபைஸர் மற்றும் பயோஎன்டெக் இணைந்து உருவாக்கிய கரோனா தடுப்பு மருந்து, 3ஆம் கட்ட மருத்துவச் சோதனையில் 90 விழுக்காடு பலனளிப்பதாக அந்நிறுவனம் அறிவித்தது.
அதைத்தொடர்ந்து, அமெரிக்காவின் மற்றொரு நிறுவனமான மாடர்னா, தனது கரோனா தடுப்பு மருந்து 94.5 விழுக்காடு பலனளிக்கும் வகையில் உள்ளதாக அறிவித்திருந்தது. இந்த இரு தடுப்பு மருந்துகளில் எதேனும் ஒன்று ஒப்புதலுக்கு பின் விரைவில் புழக்கத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தனது தடுப்பு மருந்தை ரூ.1850 முதல் ரூ.2750 வரை விற்கவுள்ளதாக மாடர்னா நிறுவனம் அறிவித்துள்ளது.