அமெரிக்காவின் சாண்டா குரூஸ் கவுண்டி பகுதியைச் சேர்ந்தவர் ஷெரிஃப். தொழிலதிபரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான இவரை கடந்த புதன்கிழமை அதிகாலை மூன்று மணிக்கு வீட்டிற்குள் புகுந்து அடையாளம் தெரியாத நபர்கள் கடத்தினர். இதையடுத்து உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் அந்நாட்டு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஷெரிஃபை தேடிவந்தனர்.
இந்நிலையில் அந்தப் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் கேட்பாரற்று நிலையில் கார் ஒன்று நிற்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் அங்கு சென்ற காவல் துறையினர் காரை சோதனை செய்தபோது காணாமல்போன ஷெரிஃப் சடலமாக கிடப்பது தெரியவந்தது.