தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

புயலால் 57 லட்சம் பேர் பாதிப்பு - பலத்த மழை மற்றும் புயல்

டெகுசிகல்பா: ஹோண்டுராஸ் நாட்டில் சுமார் மூன்று லட்சத்து 57 ஆயிரம் பேர் சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

Hurricane Iota impacts over 357k people in Honduras
Hurricane Iota impacts over 357k people in Honduras

By

Published : Nov 19, 2020, 2:26 PM IST

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் வெப்பமண்டல தாழ்வு நிலையின் காரணமாக பலத்த மழை மற்றும் புயல் உருவாகியது. இதனால் 42 ஆறுகள், நீரோடைகள் அனைத்தும் நிரம்பி வழிந்து, பாலங்களையும் அணைகளையும் சேதப்படுத்தின. இதனால் டெகுசிகல்பா உள்ளிட்ட மற்றொரு நகரமும் மிகுந்த பாதிப்பினைச் சந்தித்தது.

இதனால் அப்பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 750 பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டன. புயல் மற்றும் சூறாவளி காரணமாக 31 முக்கிய சாலைகள் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளன. ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளது.

இதுவரை இந்த புயலினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. உள்ளூர் செய்தி நிறுவனங்கள் மட்டும் நிவாரண அறிவிப்புகள் குறித்த அறிவிப்புகளைத் தெரிவித்து வருகின்றன.

இதையும் படிங்க:பிலிப்பைன்ஸ் புயல்: பலி எண்ணிக்கை 53ஆக உயர்வு

ABOUT THE AUTHOR

...view details