ஈரான் நாட்டின் முதன்மைத் தலைவர் அயதுல்லா அலி கமேனி வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் அமெரிக்கா நாட்டிற்கு எச்சரிக்கை விடுத்துப் பேசினார். மேலும் இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளையும் விமர்சித்திருந்தார்.
இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதிலளித்துள்ளார். அதில், 'உங்களின் பொருளாதாரம் சீரழிந்து காணப்படுகிறது. மக்கள் துன்பப்படுகின்றனர். உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை' எனத் தெரிவித்தார்.