உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான Google தனது ஊழியர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பில், கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும்,
வரும் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதிக்குள் தடுப்பூசி விதிகளுக்கு இணங்காத பணியாளர்கள் 30 நாட்களுக்கு பணத்துடன் கூடிய நிர்வாக விடுப்பில் வைக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது.
அந்த காலத்தில், தடுப்பூசி செலுத்திக்கொண்டால் பிரச்னை இல்லை என்றும்; அதைத் தொடர்ந்தும் அவர்கள் ஆறுமாதம் வரை தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளது.