உலக அளவில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கோவிட்-19 தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. இதுவரை ஆறு கோடியே 48 லட்சத்து 65 ஆயிரத்து 959 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 லட்சத்து 99 ஆயிரத்து 671ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நான்கு கோடியே 49 லட்சத்து 61 ஆயிரத்து 955ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் ஆறு லட்சத்து 70 ஆயிரத்து 337 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 ஆயிரத்து 830 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் அதிக கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. இதுவரை அந்நாட்டில் ஒரு கோடியே 43 லட்சத்து 14 ஆயிரத்து 265 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு லட்சத்து 79 ஆயிரத்து 867 பேர் உயிரிழந்துள்ளனர்.