சர்வதேச அளவில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கோவிட்-19 இரண்டாம் அலை தீவிரமடைந்துவருகிறது. இதுவரை ஆறு கோடியே 41 லட்சத்து 95 ஆயிரத்து 622 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 லட்சத்து 86 ஆயிரத்து 841ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நான்கு கோடியே 44 லட்சத்து 42 ஆயிரத்து 977ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் ஐந்து லட்சத்து 88 ஆயிரத்து 541 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 ஆயிரத்து 628 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக அளவில் அதிக கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. இதுவரை அந்நாட்டில் ஒரு கோடியே 41 லட்சத்து எட்டாயிரத்து 490 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு லட்சத்து 76 ஆயிரத்து 976 பேர் உயிரிழந்துள்ளனர்.