தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

உலகளவில் ஒரேநாளில் கரோனாவுக்கு 80 ஆயிரம் பேர் பாதிப்பு

கரோனா வைரஸால் நேற்று ஒருநாளில் உலகம் முழுவதும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதன் மூலம், அதன் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 78 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

By

Published : Apr 12, 2020, 12:17 PM IST

Global COVID-19 tracker
Global COVID-19 tracker

சீனாவில் கண்டறியப்பட்ட கோவிட் 19 தொற்று, தற்போது அந்நாட்டில் குறைந்திருந்தாலும் மற்ற நாடுகளில் வேகமாக பரவிவருகிறது. இதனால் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இத்தொற்றால் முதல் உயிரிழப்பு கடந்த ஜனவரி மாதத்தில் பதிவானதையடுத்து, பல நாடுகளில் மக்கள் நாளுக்கு நாள் கொத்து கொத்தாக உயிரிழந்து வருகின்றனர். மிகவும் எளிதாக பரவும் இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.

இந்நிலையில், நேற்று ஒரேநாளில் உலகம் முழுவதும் புதிதாக 80, 684 பேருக்கு இத்தொற்று இருப்பது உறுதியானது. இதன்மூலம், உலகம் முழுவதும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்து 80 ஆயிரத்தை கடந்துள்ளது. அதில், நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

கோவிட் 19 தொற்று உயிரிழப்புகள் எண்ணிக்கை

அதேசமயம், நேற்று ஒரேநாளில் 6,094 பேர் இத்தொற்றால் உயிரிழந்துள்ளதால் உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,08,828ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் அதிகபட்சமாக 1,830 பேரும் பிரிட்டனில் 917 பேரும் நேற்று உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், உலகளவில் அதிக உயிரிழப்புகள் பதிவான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா இத்தாலியை விஞ்சியுள்ளது.

இதையும் படிங்க:வெள்ளை மாளிகை பின்பற்றும் வேறு நாட்டு தலைவர்கள் யார் தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details