அமெரிக்காவின் தலைமை பெருந்தொற்று நிபுணரான ஆன்டனி பவுச்சி இது குறித்து விசாரணை நடத்த தீவிரமான முன்னெடுப்புகளை மேற்கொண்டுவருகிறார். அமெரிக்க உளவுத்துறை இதுதொடர்பான ஆவணங்களைத் திரட்டி, அதன் மூலம் உண்மையை கண்டறிய அமெரிக்க ஆராய்சி அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.
மேலும், இந்த வைரஸ் பரிசோதனை மையத்திலிருந்து வெளியேறவில்லை என்பதை உறுதி செய்யும் விதமாக வுகானில் முதல் முதலில் பாதிப்புக்குள்ளான ஒன்பது நபர்களின் முழு மருத்துவ அறிக்கையை வெளியிட வேண்டும் என ஆன்டனி பவுச்சி இப்போது அழுத்தம் அளித்துள்ளார்.