தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'காஷ்மீர் விவகாரத்தில் உலகநாடுகளின் செயல் ஏமாற்றத்தை அளிக்கிறது' - வருந்திய இம்ரான் கான்

நியூயார்க்: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்க விவகாரத்தில், நீண்ட நாட்களாக சர்வதேச நாடுகள் பதில் அளிக்காதது வருத்தம் அளிக்கிறது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

By

Published : Sep 25, 2019, 10:23 AM IST

Imran khan about kashmir in UN

கடத்த சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு காஷ்மீருக்கு வழங்கிவந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கிய நிலையில் பாகிஸ்தான் இதற்கு கண்டனம் தெரிவித்தது. நாளுக்கு நாள் பாகிஸ்தான் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாகிஸ்தான் வான்வழிப்பாதையை இந்தியப் பயன்படுத்த தடை விதித்தது.

இதனைத் தொடர்ந்து 74ஆவது ஐநா பொதுக்கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை பற்றி பாகிஸ்தான் கேள்வி எழுப்பும் என அணைத்து நாடுகளும் எதிர்பார்த்தன. இந்த நிலையில் நேற்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ‘காஷ்மீர் விவகாரத்தில் உலக நாடுகளின் செயல் தனக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது என்றும்; மேலும் அமெரிக்காவில் இப்படி ஒரு சம்பவம் நடந்தால், இப்படி தான் மவுனம் காப்பீர்களா?’ எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க:

காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார்: ட்ரம்ப்

ABOUT THE AUTHOR

...view details