சீனாவில் கண்டறியப்பட்ட கோவிட்-19 தொற்று, தற்போது அந்நாட்டில் குறைந்திருந்தாலும் மற்ற நாடுகளில் வேகமாகப் பரவிவருகிறது. இதனால் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இத்தொற்றால் முதல் உயிரிழப்பு கடந்த ஜனவரி மாதத்தில் பதிவானதையடுத்து, பல நாடுகளில் மக்கள் நாளுக்கு நாள் கொத்து கொத்தாக உயிரிழந்து வருகின்றனர்.
மிகவும் எளிதாக பரவும் இந்த வைரசைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறிவருகின்றன. இதனால் அசாதாரண சூழல் ஏற்பட்ட நிலையில், இந்நோயை மனித நெருக்கடி என, ஐநா துணை தலைவர் அமினா முகமது குறிப்பிட்டுள்ளார்.
கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்த கூட்டம் அமெரிக்கா நியூயார்க் நகரில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட அவர், "அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியதன் மூலம் கரோனா வைரஸ் தொற்று மனித இனத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் சுகாதார அவசர நிலை நிலவிவருகிறது.