உலகின் மிகப்பெரும் வல்லரசு நாடாகக் கருதப்படும் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. கரோனா பரவல் காரணமாக, இத்தேர்தல் முழுவதும் தபால் மூலம் நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில், 74 வயதான அதிபர் ட்ரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் 77 வயதான முன்னாள் அதிபர் ஜோ பிடனும் களமிறங்கவுள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், 6 முதல் 8 விழுக்காடு வரை ட்ரம்பைவிட ஜோ பிடன் முன்னணியில் உள்ளார்.
இந்தத் தேர்தில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடனை தோற்கடிக்கும் பரப்புரைகளில் ரஷ்யா இறங்கியுள்ளதாக அமெரிக்க புலானய்வுத் துறை சமீபத்தில் குற்றம் சாட்டியது. அதேபோல், சீனாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதால்தான், அதிபர் ட்ரம்ப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் சீனா இறங்கியுள்ளதாகவும் அமெரிக்க உயர்மட்ட அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.