தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 30, 2021, 12:24 PM IST

ETV Bharat / international

ஆஸ்ட்ரா செனேக்கா தடுப்பூசி: தற்காலிகமாக நிறுத்தி வைக்க கனடாவில் பரிந்துரை!

55 வயதுக்கும் குறைவானவர்களுக்கு அஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசி செலுத்துவதை நிறுத்த வேண்டும் என கனடா நாட்டின் தடுப்பூசி ஆலோசனை குழு பரிந்துரை செய்துள்ளது.

ஆஸ்ட்ரா செனேக்கா
ஆஸ்ட்ரா செனேக்கா

உலகம் முழுவதும் கோவிட்-19 தடுப்பூசிகள் செலுத்துவது மும்முரமாக நடைபெற்றுவருகிறது. அமெரிக்காவின் அண்டை நாடான கனடாவில் அஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசி பயன்படுத்தப்பட்டுவரும் நிலையில், இந்தத் தடுப்பூசிக்கு அந்நாடு திடீர் கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது.

55 வயதுக்கும் குறைவான நபர்களுக்கு அஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசி செலுத்துவதை நிறுத்த வேண்டும் என அந்நாட்டின் தடுப்பூசி ஆலோசனை குழு பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரையை அமல்படுத்துவது குறித்து மாகாண அரசுகள் ஆலோசித்துவருகின்றன.

பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இந்தத் தடுப்பூசி பயன்படுத்தப்படும் நிலையில், சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாக சில நாடுகள் பயன்பாட்டை நிறுத்தி வைத்தன. பின்னர், ஐரோப்பிய ஒன்றிய மருந்தக ஒழுங்காற்று குழு பாதுகாப்பை உறுதி செய்தவுடன் அந்த முடிவை ஐரோப்பிய நாடுகள் கைவிட்டன. தற்போது கனடாவிலும் இதுபோன்ற புகார் எழுந்துள்ளது.

இதையும் படிங்க:பாகிஸ்தானில் ஹோலி கொண்டாடிய இந்துக்கள்!

ABOUT THE AUTHOR

...view details