தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'கரோனா நம்மால் பலருக்கு பரவக்கூடாது என்பதாலேயே...' - பிடன் - Biden on Coronavirus spreaf

வாஷிங்டன்: நமது நிகழ்ச்சிகளால் கரோனா பரவிடக் கூடாது என்பதாலேயே சமூக இடைவெளி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி பரப்புரைக் கூட்டங்கள் நடத்தப்படுவதாக ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

Biden
Biden

By

Published : Oct 25, 2020, 9:25 AM IST

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்பை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார். தேர்தலுக்கு இன்னும் 10க்கும் குறைவான நாள்களே உள்ளதால் இரு தரப்பினரும் தங்கள் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கரோனா பரவல் முடிந்துவிட்டது என்பதை காட்டும் வகையில் அதிபர் ட்ரம்ப், தனது பரப்புரைகளில் மாஸ்க் அணியாமலும் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் பங்கேற்றுவருகிறார்.

ஆனால், மறுபுறம் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடனின் பரப்புரை கூட்டங்கள் அனைத்தும் சமூக இடைவெளியை கடைபிடித்து நடத்தப்படுன்றன.

இந்நிலையில், நேற்று பென்சில்வேனியா மாகாணத்தில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய பிடன், "உங்களுடன் நெருக்கமான பரப்புரை கூட்டங்களில் பங்கேற்கவில்லை என்று எனக்கு கவலையாக உள்ளது; எனக்கும் இவை பிடிக்கவில்லைதான். ஆனால், தற்போதைய சூழ்நிலையில் இவை காலத்தின் கட்டாயம். நம்மால் பலருக்கு கரோனா பரவல் ஏற்பட்டுவிடக் கூடாது" என்றார்.

கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் கரோனா பரவல் குறைந்திருந்த நிலையில், தற்போது கரோனா உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 80 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் நாட்டில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 88 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மேலும், இந்தத் தொற்றால் 1.1 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா பரவலுக்கு மத்தியிலும் வரும் நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அதில், முன்கூட்டியே வாக்களிக்கும் முறையை பயன்படுத்தி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று வாக்களித்தார்.

இதையும் படிங்க:அமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்களித்தார் அதிபர் ட்ரம்ப்

ABOUT THE AUTHOR

...view details