தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இஸ்ரேலுக்கு ரூ.5 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள் விற்க அமெரிக்கா முடிவு!

போர் சூழலுக்கு மத்தியில் இஸ்ரேல் நாட்டிற்கு சுமார் ஐந்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை விற்க அமெரிக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

By

Published : May 19, 2021, 7:42 AM IST

Joe Biden
Joe Biden

இஸ்ரேல் நாட்டிற்கு சுமார் ஐந்தாயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை விற்க அமெரிக்கா அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையே போர் சூழல் நிலவி வரும் நிலையில் அமெரிக்கா எடுத்துள்ள இந்த முடிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

முன்னதாக, இரு தரப்பினரும் போரை கைவிட்டு அமைதிக்கு திரும்ப வேண்டும் என அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியிருந்தார். அதேவேளையில், இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள அனைத்து உரிமையும் உள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.

இஸ்ரேல் நாட்டிற்கு ஆதரவு நிலைபாட்டை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், காஸா பகுதியில் நடைபெறும் தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி வலியுறுத்தி வருகிறது. காஸா பகுதியில் கடந்த இருவாரங்களாக நடைபெற்ற தாக்குதலில் இதுவரை 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க:காசாவிலிருந்து வெளியேறிய 38,000 பாலஸ்தீனியர்கள் - ஐநா அறிக்கை

ABOUT THE AUTHOR

...view details