அர்மேனியா-அசர்பைஜான் நாடுகளுக்கு இடையே தற்போது போர் மேகம் சூழ்ந்துள்ளது. ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் பகுதிகளான இந்த இரு நாடுகளுக்கும் இடையே உள்ள எல்லைப் பகுதி தொடர்பாக 1994ஆம் ஆண்டு முதல் கடுமையான மோதல் போக்கு நிலவிவருகிறது.
சர்ச்சைக்குரிய பிராந்தியமான நகோர்னோ-காாராபக் பகுதியில் இரு நாடுகளும் தற்போது போரிட்டுவருகின்றன. மலைப்பகுதியான இங்கு அசர்பைஜான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 31க்கும் மேற்பட்ட அர்மேனியப் படையினர் கொல்லப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், வாஷிங்டனுக்கு செல்லவுள்ள இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள், அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவை சந்தித்துப் பேசவுள்ளனர். இதுகுறித்து அமெரிக்காவுக்கான அசர்பைஜான் நாட்டு தூதர் எலின் சுலேய்மானோவ் வெளியிட்ட அறிக்கையில், "அமெரிக்கா அழைப்பு விடுத்த நிலையில், அந்நாட்டிற்கு செல்லவுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஹுன் பேராமோவ், பாம்பியோவை சந்தித்து பேசவுள்ளார்.
நகோர்னோ - காாராபக் பிராந்தியத்தில் நிலவும் பிரச்னை குறித்து இக்கூட்டத்தில் பேசவுள்ளோம். போர் நிறுத்தம் என்பது இங்கு பிரச்னையாக இல்லை. சர்வதேச விதிப்படி ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெறாமல் இருப்பதே சிக்கலாக உள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.