தமிழ்நாடு

tamil nadu

இங்கிலாந்தைத் தொடர்ந்து கனடாவிலும் பயன்பாட்டுக்கு வரும் ஃபைசர் கரோனா தடுப்பூசி!

By

Published : Dec 10, 2020, 10:38 AM IST

ஒட்டாவா: இங்கிலாந்தைத் தொடர்ந்து இரண்டாவது நாடாக கனடாவிலும் ஃபைசர் கரோனா தடுப்பூசி அடுத்த வாரம் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

இங்கிலாந்தை தொடர்ந்து கனடாவிலும் பயன்பாட்டுக்கு வரும் பைசர் கரோனா தடுப்பூசி!
இங்கிலாந்தை தொடர்ந்து கனடாவிலும் பயன்பாட்டுக்கு வரும் பைசர் கரோனா தடுப்பூசி!

ஃபைசர்-பயோஎன்டெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசி 95 விழுக்காடு வெற்றிபெற்றதாகக் கூறி, அதனை கரோனாவுக்கான மருந்தாக பிரிட்டன் அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. இதனையடுத்து, அவசரகாலப் பயன்பாட்டிற்காக இந்த மருந்தினைப் பயன்படுத்த அனுமதி வழங்கியது.

இந்தத் தடுப்பு மருந்து நேற்று (டிசம்பர் 8) பிரிட்டன் மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. முதற்கட்டமாக, முதியவர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்குச் செலுத்தப்பட்டுவருகிறது.

இந்நிலையில், இங்கிலாந்து அரசிற்குப் பிறகு இரண்டாவதாக கனடா அரசும் ஃபைசர்-பயோ என்டெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள அந்நாட்டு சுகாதாரத் துறை, தடுப்பூசியின் பாதுகாப்பு, செயல்திறன் குறித்த தரவுகளைப் பற்றி முழுமையான விவரங்கள் வந்த பிறகே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதனால், இதனை கனடர்கள் நம்பலாம். அதுமட்டுமின்றி மேற்படியும் கண்காணிக்க பல கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஃபைசர் தடுப்பூசி முதல் டோஸ் அடுத்த வாரத்தில் கனடா மக்களுக்கு கொடுக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

ஃபைசர்-பயோ என்டெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இருவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக, பிரிட்டன் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...விவசாயிகள் போராட்டம் இந்தியா-பாகிஸ்தான் பிரச்சினையா? குழப்பிய இங்கிலாந்து பிரதமர்!

ABOUT THE AUTHOR

...view details