தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சூடானில் ராணுவ ஆட்சிக்கு சவுதி அரேபியா ஆதரவு!

ரியாத்: சூடானில் ஏற்பட்டுள்ள ராணுவ ஆட்சிக்கு சவுதி அரேபியா அரசு ஆதரவு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம்

By

Published : Apr 14, 2019, 10:38 AM IST

சூடானில் 30 ஆண்டுகளாக அதிபராக இருந்த ஒமர் அல் பஷீரை அந்நாட்டு ராணுவம் அதிரடியாக ஏப்ரல் 11ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தது. இதனால், அவருக்கு எதிராக போராடிய மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

எனினும், ராணுவப் புரட்சியை விரும்பாத அந்நாட்டு மக்கள், தலைநகர் கார்டூமில் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். இத்தகைய சூழலால் மீண்டும் நெருக்கடி அதிகரித்தது. இதற்கிடையே, பாதுகாப்புத் துறை அமைச்சரும், ராணுவ கவுன்சிலின் தலைவருமான அவத் இபின் ஆஃப் பதவி விலகுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், புதிய தலைவராக பொறுப்பேற்ற ஜெனரல் அப்டெல் பட்டாஹ பூர்ஹான், போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில், சூடானில் ஏற்பட்டுள்ள ராணுவ ஆட்சிக்கு சவுதி அரேபியா ஆதரவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், " சூடானில் ராணுவம் எடுத்துவரும் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். அத்தகைய நடவடிக்கைகள் மூலம் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை விரைவில் ஏற்படும் என்று நம்புகிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details