20ஆம் நூற்றாண்டில் நம்முடன் புவியைப் பகிர்ந்த, பல உயிரினங்களை நாம் நிரந்தரமாக அழித்துவிட்டோம். மனிதனின் பேராசை காரணமாக பல்வேறு உயிரினங்களை இப்போதும் அழித்து வருகிறோம். சைபீரியன் புலிகள், நீலத் திமிங்கலங்கள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களும் தற்போது அழியும் நிலையில் உள்ளன.
அதன்படி உலகில் மிக அரிய உயிரினங்களில் ஒன்றாகக் கருதப்படும் வெள்ளை ஒட்டகச்சிவிங்கிகள் தற்போது கென்யாவில் வேட்டையாடப்பட்டுள்ளன.
கிழக்கு கென்யாவிலுள்ள கரிசா என்றப் பகுதியில், இரண்டு வெள்ளை ஒட்டகச்சிவிங்கிகளின் எலும்புக்கூடுகளை கென்ய வனத் துறையினர் கண்டுபிடித்தனர்.
எலும்புக் கூடுகளை பரிசோதித்த மருத்துவர்கள், அவை கொல்லப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியிருக்கலாம் என்று தெரிவித்தனர். மேலும், அவற்றில் ஒன்று பெண் ஒட்டகச்சிவிங்கி என்றும்; மற்றொன்று அதன் குட்டியாக இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.