நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் புத்தாடை அணிந்து இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். உலக தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தென்ஆப்பிரிக்காவில் உள்ள இந்திய தூதர் ரஞ்சன் ஏற்பாடு செய்த தீபாவளி விழா கொண்டாட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் பல தூதர்களும், பிரதிநிதிகளும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
விழாவின் போது பேசிய ஜோகன்னஸ்பர்க் மேயர் ஜெஃப் மகுபோ, "கோவிட் -19 கட்டுப்பாடுகள் காரணமாக இந்தாண்டு தீபாவளி திருவிழா பெரியளவில் நடத்தப்படவில்லை. வரலாற்று ரீதியாக, ஜோகன்னஸ்பர்க் 'ஒளியின் நகரம்' எனக் கூறப்படுகிறது