தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 6, 2021, 7:29 PM IST

ETV Bharat / international

ஆற்று வெள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து... 31 பேர் மூழ்கி உயிரிழப்பு...

கென்யா நாட்டில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற போது பேருந்து ஆற்று வெள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளானதில் 31 பேர் உயிரிழந்தனர்.

Kenya bus accident
Kenya bus accident

நைரோபி:கென்யா நாட்டின் கிடுய் மாகாணத்தில் உள்ள என்சியூ ஆற்றை கடக்க முயன்ற பேருந்து ஒன்று வெள்ளம் காரணமாக தண்ணீருக்குள் கவிழ்ந்து அடித்து செல்லப்பட்டது.

இந்த விபத்தால் பேருந்தில் இருந்த 48 பேர் நீரில் மூழ்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதில் 17 பேர் மீட்கப்பட்டனர். 4 குழந்தைகள் உள்பட 31 நீரில் மூழ்கி பலியாகினர்.

முதல்கட்ட தகவலில், திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற போது பேருந்து ஆற்று வெள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவில் ஒருவார காலமாக கனமழை பெய்துவரும் நிலையில், ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பல்கேரியா பேருந்து விபத்தில் 46 பேர் மரணம்

ABOUT THE AUTHOR

...view details