தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி உறுப்பினர்களுக்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற்று அதற்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்களை கொண்டு தற்போது மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், ஒன்றியக் குழுத் தலைவர், ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கான மறைமுக தேர்தலும் நடைபெற்றது.
இதில் திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் ஊராட்சியில் திமுக அதன் கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சிக்கு ஊராட்சி மன்றதுணைத் தலைவர் பதவியை ஒதுக்கியுள்ளதாக கூறி தேர்தலை சந்தித்தது. இந்நிலையில் ஊராட்சிமன்ற தலைவர் பதவியில் திமுக வெற்றிபெற்றது.