தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 13, 2020, 12:58 PM IST

Updated : Jan 13, 2020, 7:36 PM IST

ETV Bharat / headlines

திமுகவுக்கு கருப்புக்கொடி காண்பித்து மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்: ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பதவியில் திமுக கூட்டணி துரோகம் செய்துவிட்டதாக மனிதநேய மக்கள் கட்சியினர் கருப்புக்கொடி காண்பித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மனிதநேய மக்கள் கட்சியினர் கருப்புகொடி காட்டி ஆர்ப்பாட்டம்
மனிதநேய மக்கள் கட்சியினர் கருப்புகொடி காட்டி ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி உறுப்பினர்களுக்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற்று அதற்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்களை கொண்டு தற்போது மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், ஒன்றியக் குழுத் தலைவர், ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கான மறைமுக தேர்தலும் நடைபெற்றது.

இதில் திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் ஊராட்சியில் திமுக அதன் கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சிக்கு ஊராட்சி மன்றதுணைத் தலைவர் பதவியை ஒதுக்கியுள்ளதாக கூறி தேர்தலை சந்தித்தது. இந்நிலையில் ஊராட்சிமன்ற தலைவர் பதவியில் திமுக வெற்றிபெற்றது.

மனிதநேய மக்கள் கட்சியினர் கருப்புகொடி காட்டி ஆர்ப்பாட்டம்

தற்போது வெற்றி பெற்றவுடன் தங்களுக்காக பேசப்பட்ட ஊராட்சி மன்ற துனைத்தலைவர் பதவியை தரமறுப்பதாகவும், அதிலும் திமுக உறுப்பினரையே நிறுத்த முயற்சிப்பதாக கூறி மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பதவியேற்கும் திமுக உறுப்பினரை கண்டித்தும், திமுக கூட்டணி துரோகம் செய்துவிட்டதாகவும் கூறி கருப்பு கொடி காண்பித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:

பத்திரிகையாளர் அன்பழகன் கைதிற்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம்!

Last Updated : Jan 13, 2020, 7:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details