தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / headlines

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டு - நடவடிக்கை கோரி புகார் - மக்களை திரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வதந்திகளை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஸ்டெர்லைட் ஆதரவு கிராம கூட்டமைப்பினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களை திரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களை திரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

By

Published : Jul 16, 2022, 12:14 PM IST

Updated : Jul 17, 2022, 11:00 AM IST

தூத்துக்குடி:ஸ்டெர்லைட் ஆதரவு கிராம கூட்டமைப்பு தலைவர் வழக்கறிஞர் எம்.ஜெயபெருமாள் தலைமையில் வழக்கறிஞர்கள் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வதந்திகளை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஸ்டெர்லைட் ஆதரவு கிராம கூட்டமைப்பினர் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

பின்னர் கூட்டமைப்பு தலைவர் வழக்கறிஞர் எம்.ஜெயபெருமாள் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலை என்ற பெயரிலும் கேன்சர் என்ற பெயரிலும் மக்கள் மத்தியில் தவறான செய்திகளை பொதுமக்கள் நம்பும்படி பரப்பி உள்ளனர்.

பொது மக்களை மூளை சலவை செய்து திசை திருப்பி போராட்டத்தில் ஈடுபட செய்துள்ளனர். அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கு எதிராகவும் சட்டவிரோத காரியங்களில் ஈடுபட பொதுமக்களை தூண்டியுள்ளனர். பொது அமைதியை குலைக்கும் நோக்கில் மக்களிடம் நேரடியாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தி பொதுமக்கள் இளைஞர்கள் மாணவர்கள் வாழ்வை பாழ்படுத்தி உள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இன்று வரை இது போன்ற சட்டவிரோத செயலை எந்தவித தடையின்றி தொடர்ந்து செய்து வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டு - நடவடிக்கை கோரி புகார்

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஆலைக்கு எதிராக கேன்சர் என பொய் பிரச்சாரம் செய்த பாத்திமா பாபு, நித்தியானந்தா ஜெயராம், தெர்மல் ராஜா, அரி ராகவன், கிட்டு என்ற கிருஷ்ணமூர்த்தி, மெரினா பிரபு, மகேஷ் ஆகியோர் மேற்கொண்ட தவறான செய்தியால் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். எனவே இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளனர்.

மனுவில் வழக்கறிஞர் ஏ.ஹசீமா என்பவர் மூலம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் காற்று, நீர் மாசு, புற்றுநோய் பற்றிய கேள்விகளுக்கு அரசின் அறிக்கையை பெற்றுள்ளோம். அந்த அறிக்கையில் காசு மாறுபாடு காரணமாக புற்றுநோய் உருவாகவில்லை என்று தெளிவாக அரசு பதில் அளித்துள்ளது.

எனவே இந்த நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் அரசு மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் போன்ற குற்றவழக்குகள் பதிவு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்யப்போவதாக அறிவிப்பு

Last Updated : Jul 17, 2022, 11:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details