தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

‘மும்பை சென்சார் போர்டு ரூ.6.5 லட்சம் வாங்குனாங்க’.. நடிகர் விஷால் பரபரப்பு புகார்! - லஞ்சம் வாங்கிட்டாங்க நடிகர் விஷால் புகார்

மும்பையிலுள்ள சென்சார் போர்டு (CBFC) அதிகாரிகள், மார்க் ஆண்டனி படத்தை ஹிந்தியில் ரிலீஸ் செய்வதற்கு ரூ.3 லட்சம், சான்றிதழுக்கு ரூ.3.5 லட்சம் என மொத்தம் ரூ.6.5 லட்சம் லஞ்சம் லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Etv Bharat நடிகர் விஷால்
Etv Bharat நடிகர் விஷால்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 28, 2023, 9:01 PM IST

சென்னை:நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இப்படம், இதுவரை ரூ.80 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரிது வர்மா, சுனில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார். தமிழில் இப்படத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய வரவேற்பை அடுத்து, இப்படம் இன்று இந்தியில் வெளியாகியுள்ளது.

இதன்படி, இன்று காலை முதல் இந்தியில் இப்படம் வெளியாகி ஓடி வருகிறது. இந்த நிலையில், இப்படத்தை இந்தியில் வெளியிட மும்பை சென்சார் போர்டு லஞ்சம் கேட்டுள்ளதாக நடிகர் விஷால் பரபரப்பு புகார் அளித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சினிமாவில்தான் நான் ஊழலை பார்த்துள்ளேன். நிஜத்தில் நடந்துள்ளது. இதனை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

அதுவும் அரசு அலுவலகத்தில், மும்பை சென்சார் போர்டு அலுவலகத்தில் மார்க் ஆண்டனி இந்தி பதிப்பை வெளியிட ரூ.6.5 லட்சம் கேட்கின்றனர். 3 லட்சம் படத்தை திரையிடவும் 3.5 லட்சம் சான்றிதழ் வழங்கவும் கேட்கின்றனர். எனது திரை வாழ்வில் இது போன்ற ஒன்றை நான் எதிர்கொண்டதில்லை. எங்களுக்கு வேறு வழியில்லை. ஏராளமானோருக்கு பங்கு செல்கிறது. இந்த விஷயத்தை பிரதமர் மோடியின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளேன்.

மும்பை சென்சார் போர்டு மீது புகார் அளித்த விஷால்

இது எனக்காக மட்டுமல்ல எதிர்காலத்தில் வேறு தயாரிப்பாளர்களுக்கு இதுபோல் நடக்கக் கூடாது. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊழலுக்கு செல்வதா?” என்றும், தன்னிடம் உள்ள ஆதாரங்களை பதிவிடுகிறேன் என்று மீடியேட்டர் மேனகா என்பவர் பேசும் ஆடியோவையும் விஷால் வெளியிட்டுள்ளார். மேலும், உண்மை எப்போதும் வெல்லும் என்றும் பதிவிட்டுள்ளார்.

முன்னணி நடிகர் ஒருவர் சென்சார் போர்டு மீது பகிரங்கமாக ஊழல் புகார் தெரிவித்து இருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:Leo Movie Update: லியோ 2வது சிங்கிள் வெளியீடு.. இணையத்தை கலக்கும் 'Badass ma, leo dass ma' பாடல்!

ABOUT THE AUTHOR

...view details