வில்லேஜ் ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் C.முருகன் அன்னை K.செந்தில்குமார் இருவரும் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு "குளவி" என்று பெயரிட்டுள்ளனர். R.K. சுரேஷ் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
கதாநாயகியாக சசிகுமார் ஜோடியாக அயோத்தி படத்தில் நடித்த அமீரா வர்மா நடிக்கிறார். ஆனந்த் நாக், கஞ்சா கருப்பு, சிங்கம்புலி, அப்பு குட்டி, நிமல், முத்துகாளை இவர்களுடன் இன்னும் ஏராளமான நட்சத்திரங்களும் நடிக்கவுள்ளனர்.
மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பிஸ்தா போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த விஜயன் முனுசாமி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். பல வெற்றி படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் N.R. ரகுநந்தன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி V.S.செல்வதுரை இயக்குகிறார்.
இவர் எழுத்தாளர் பாலகுமாரன், இயக்குநர்கள் A.R.முருகதாஸ், சித்து ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியதோடு ஏராளமான படங்களுக்கு இணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
படம் பற்றி இயக்குநர் V.S.செல்வதுரை கூறியதாவது, 'ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு இந்த படத்தை உருவாக்கி இருக்கிறேன். அந்த மக்களின் கலாசாரம் வாழ்வியலை இதில் பதிவு செய்ய இருக்கிறோம். குடும்பக்கட்டமைப்பு மற்றும் அதில் உள்ள முரண்பாடுகளையும், மனித உறவுகளின் சீரழிவுகளையும் இதில் நேர்த்தியாக சொல்லி இருக்கிறோம்.