தமிழ்நாடு

tamil nadu

நடிகர் விஜய்சேதுபதி மீது தொடர்ந்த வழக்கு: ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்!

By

Published : Jul 29, 2022, 6:11 PM IST

பெங்களூரூ விமான நிலையத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி மீது தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஜய்சேதுபதி மீது தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது
நடிகர் விஜய்சேதுபதி மீது தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது

சென்னை: சைதாப்பேட்டையைச் சேர்ந்த மகா காந்தி, மருத்துவப் பரிசோதனைக்காக மைசூர் செல்வதற்காக கடந்தாண்டு நவம்பர் 2ஆம் தேதி இரவு பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராத விதமாக சந்தித்தபோது, அவரின் சாதனைகளைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்ததாகவும்,

ஆனால், தனது வாழ்த்துகளை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்திப் பேசியதுடன், தன்னையும் தனது சாதியையும் பற்றி தவறாகப் பேசியதாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.

அந்த மனுவில் உண்மை சம்பவங்கள் இவ்வாறிருக்க, மறுநாள் ஊடகங்களில் தான் தாக்கப்பட்டதாக விஜய் சேதுபதி தரப்பில் அவதூறு பரப்புவதாக மனுவில் குற்றம்சாட்டியுள்ளார். எனவே, நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை 9ஆவது பெருநகர உரிமையியல் நீதிமன்றம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சம்மனை ரத்து செய்யக்கோரியும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது விஜய் சேதுபதி தரப்பில் வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜராகி, பெங்களூரு எல்லை தொடர்புடைய வழக்கை சென்னையில் தொடர்ந்தது, அதை சைதாப்பேட்டை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது, இயந்திரத்தனமாக உடனடியாக சம்மன் அனுப்பியது, சமரசம் ஏற்பட்டதை மறைத்து அவதூறு வழக்கு என அடுத்தடுத்த தவறுகள் நடந்துள்ளதாக வாதிட்டார்.

விளம்பர நோக்கத்துடன், மூன்று கோடி ரூபாய் இழப்பீடு கேட்டுள்ளதால், அதிகப்படியான அபராதத்துடன் வழக்கை ரத்து செய்ய வேண்டுமென வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று இறுதி உத்தரவு பிறப்பித்த நீதிபதி சத்தி குமார் சுகுமார குரூப், மகா காந்தியை தாக்கியதாக விஜய் சேதுபதி மீதான பதிவான வழக்கை ரத்துசெய்து உத்தரவிட்டார். மேலும், விஜய் சேதுபதி மீதான அவதூறு வழக்குக்குத்தடை விதிக்க நீதிபதி மறுப்புத்தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்த தமிழ்நாடு அரசு!

ABOUT THE AUTHOR

...view details