நயன்தாரா தனது திருமணத்திற்கு பிறகு அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை தொடங்கவிருக்கிறார். நயன்தாரா நடிக்கும் படத்திற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
நிலேஷ் கிருஷ்ணா இயக்கும் இந்த படத்தில் ஜெய், சத்யராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். NAAD ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸுடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ”லேடி சூப்பர்ஸ்டார் 75” என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார்.விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இத்திரைப்படத்தின் அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான ஜீ ஸ்டுடியோஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
திருமணத்திற்கு முன் நயன்தாரா கடைசியாக நடித்து திரையரங்கில் வெளியான “காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மொபைல் திரையரங்கில் வெளியாகும் முதல் திரைப்படம் ‘பெஸ்டீ'