தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

குய்கோ படத்திற்கு தயாரிப்பு நிறுவனம் உயிரோடு அஞ்சலி வைத்து விட்டது… இயக்குநர் வேதனைப் பதிவு! - yogi babu

Kuiko Movie Removed From Theatres: குய்கோ திரைப்படம் திரையரங்குகளில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து படத்தின் இயக்குநர் அருள்செழியன் வேதனையுடன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

kuiko movie removed from theatres director released his rant statement
இயக்குநர் அருள்செழியனின் வேதனைப் பதிவு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2023, 7:15 PM IST

சென்னை: செய்தித்துறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய அருள்செழியன், தற்போது முதல் முறையாக குய்கோ என்ற படத்தை இயக்கி இயக்குநராகவும் புது அவதாரம் எடுத்துள்ளார். குடியிருந்த கோயில் என்ற வார்த்தையின் சுருக்கமே ’குய்கோ’ என இப்படத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் விதார்த், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப்படம் கடந்த நவம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இப்படத்தில் வெளிநாட்டில் வேலை செய்பவரான யோகி பாபு நடித்துள்ளார். அவரது அம்மா இறந்து விட இறுதி காரியங்கள் செய்ய மகன் வர வேண்டும். அவர்‌ வரும் வரை பிரீஸர் பாக்ஸ்-இல் அம்மாவின் உடல் வைக்கப்படுகிறது. நாயகன் வந்து அம்மாவிற்கு இறுதிச் சடங்குகளை முடிக்கிறார். அம்மா வைக்கப்பட்டு இருந்த பிரீஸர் பாக்ஸை குடியிருந்த கோயிலாக நினைத்து வழிபடுகிறார் நாயகன்.

இந்த கதையை அழகான பொழுதுபோக்கு மற்றும் அரசியல் நையாண்டி உடன் இயக்குநர் அருள்செழியன் இயக்கியுள்ளார். பத்திரிகையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் பாராட்டும் பெற்ற‌ இப்படம், போதிய விளம்பரங்கள் இல்லாததால் திரையரங்குகளில் வரவேற்பு கிடைக்கவில்லை.

இயக்குநர் அருள்செழியனின் வேதனைப் பதிவு

இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் படத்தை திரையரங்குகளில் இருந்து நிறுத்திவிட்டதாக தெரிகிறது.‌ இதனால் இப்படத்தின் இயக்குநர் மனமுடைந்து தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “குய்கோ திரைப்படத்தை ஆதரித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி… ரசிகர்களின் ஆதரவு இருந்தும், பாராட்டுகள் குவிந்தும் குய்கோவை தயாரித்த நிறுவனம் அதை வலுக்கட்டாயமாக 'ஃபீரிசர் பாக்சில்' அடைத்து உயிரோடு அஞ்சலிக்கு வைத்து விட்டது.

'குய்கோ'விற்கு என் வீர வணக்கம்.. பிகு: துணை நின்ற அனைத்து நண்பர்களுக்கும் நன்றி பதிவு மூன்றாம் நாள் காரியம் முடிந்ததும் வெளியிடப்படும்” என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் சமீப காலமாக சிறிய படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் ரசிகர்கள் வரவு என்பது குறைவாகவே உள்ளது. இதனால் பல நேரம் காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. இதற்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்பது புரியாத புதிராகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பருத்திவீரன் பட விவகாரம்; இயக்குநர் அமீரிடம் வருத்தம் தெரிவித்த ஞானவேல்ராஜா!

ABOUT THE AUTHOR

...view details