சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், ஜிகர்தண்டா. இப்படம் வெளியாகி சிறந்த படம் என்ற பெயரைப் பெற்றது. அதுமட்டுமின்றி பாபி சிம்ஹாவிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்க உள்ளதாக ஏற்கெனவே கூறப்பட்ட நிலையில், இதற்கான முதற்கட்டப் பணிகளை கார்த்திக் சுப்புராஜ் கடந்த ஆண்டு தொடங்கினார். இதனையடுத்து வரும் 11ஆம் தேதி இப்படத்திற்கான பூஜை மதுரையில் நடக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.