சென்னை:நடிகர் சூர்யா பாலா இயக்கத்தில் 'வணங்கான்' படத்தில் நடித்து வந்தார். ஆனால், சமீபத்தில் அறிக்கை வெளியிட்ட இயக்குநர் பாலா, வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டார் என்று தெரிவித்து இருந்தார். இது சூர்யா ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே தற்போது சிவா இயக்கத்தில் 'சூர்யா 42' படத்தில் நடித்து வருகிறார். மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் தாணு தயாரிக்கும் வாடிவாசல் படத்தில் நடிப்பதற்காக சூர்யா தன்னை தயார்படுத்தி வந்தார். ஆனால், வெற்றிமாறனின் விடுதலை படமே இன்னும் முடிந்தபாடில்லை. அதனால் கடுப்பான சூர்யா, சிவா படத்துக்காக இரண்டு ஆண்டுகள் ஒதுக்கிவிட்டார். இதனால், வாடிவாசல் எப்போது தொடங்கும் என்று கேள்விக்குறியாகியுள்ளது.