தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இணையத்தில் வெளியிடத் தடை - பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இணையத்தில் வெளியிடத் தடை...!
பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இணையத்தில் வெளியிடத் தடை...!

By

Published : Sep 29, 2022, 5:53 PM IST

லைகா பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகி உள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் நாளை (செப் 30) வெளியாகிறது. இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மணிரத்னம் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து இருக்கிறார்.

இந்தப் படத்தை இணையதள சேவை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, "மிகுந்த பொருட்செலவில், இந்த திரைப்படத்தை வெளியிட உள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் படத்தை வெளியிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும்.

இதனால், திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும், எனவே சட்டவிரோத வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, சட்டவிரோதமாக இணையதளங்களில் ’பொன்னியின் செல்வன்’ படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தனுஷ் பேனருக்கு பீர் அபிஷேகம் செய்த புதுச்சேரி ரசிகர்கள்

ABOUT THE AUTHOR

...view details