லைகா பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகி உள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் நாளை (செப் 30) வெளியாகிறது. இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மணிரத்னம் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து இருக்கிறார்.
இந்தப் படத்தை இணையதள சேவை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.