தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'டான்' திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் நாளை வெளியீடு - பிரைவேட் பார்ட்டி

சிவகார்த்திகேயனின் 'டான்' திரைப்படத்தின் மூன்றாவது பாடல் நாளை(ஏப்.30) வெளியாகிறது.

’டான்’ திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் நாளை வெளியீடு
’டான்’ திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் நாளை வெளியீடு

By

Published : Apr 29, 2022, 5:52 PM IST

சிவகார்த்திகேயன், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சூரி, முனீஸ்காந்த் உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'டான்'.

லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தினை, அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர்.

இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில், முன்னதாக படம் மார்ச் 25ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், அன்றைய தினத்தில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் வெளியானது. அதனால் டான் படம் மே மாதம் 13ஆம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனிருத் இசையில் வெளியான ’ஜலபுலஜங்’ மற்றும் ’பே’ ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன. இதனைத்தொடர்ந்து நாளை(ஏப்.30) பிரைவேட் பார்ட்டி என்ற மூன்றாவது பாடல் வெளியாக உள்ளது. இப்பாடலை அனிருத் மற்றும் ஜொனிடா காந்தி இணைந்து பாடியுள்ளனர்.

இதையும் படிங்க: 'சின்னக் கவுண்டர்' வில்லன் நடிகர் 'சலீம் கவுஸ்' மறைவு - விஜயகாந்த் இரங்கல்!

ABOUT THE AUTHOR

...view details