சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 1938 ஆம் ஆண்டு ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர் வஹிதா ரஹ்மான் பிறந்தார். சிறு வயதிலேயே பரதநாட்டியம் கற்றுத் தேர்ந்த இவர், மேடைகளில் நடனம் ஆடி வந்தார். இவருக்கு டாக்டர் ஆக வேண்டும் என்பதே லட்சியமாக இருந்தது. இவருக்கு 13 வயது இருக்கும் போது இவரது தந்தை இறந்துவிட குடும்பம் சூழல் காரணமாக நடிக்க வந்துவிட்டார்.
1955ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த ரோஜுலு மராயி என்ற படத்தில் நடனமாடி தனது முதல் திரைப் பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு பழம்பெரும் நடிகரான என்டிஆர் உடன் ஜெயசிம்ஹா என்ற படத்தில் நடித்தார். தமிழில் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த 'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்' படத்தில் நடனமாடியுள்ளார். ஒருநாள் ஹைதராபாத் வந்த பாலிவுட் திரைப்பட இயக்குநர் குரு தத், இவரின் நடிப்பை பார்த்து இவரை பாலிவுட்டில் சிஐடி என்ற படத்தில் அறிமுகப்படுத்தினார்.
அதன் பிறகு பாலிவுட்டின் தவிர்க்க முடியாத நடிகையாக உருவெடுத்தார். 1960, 70, 80களில் ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்த வஹிதா ரஹ்மான் பல்வேறு விருதுகளையும் பெற்றார். அதுமட்டுமின்றி கதாநாயகியாக நடித்த தனது முதல் படத்திலேயே விலைமாது வேடத்தில் நடித்திருந்தார். குரு தத் இயக்கத்தில் வஹிதா ரஹ்மான் பியாஷா என்ற படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.