சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்து சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விஷால், எஸ்.ஜே.சூர்யா இருவரும் இரட்டை வேடங்களில் நடித்திருந்தனர். படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில், மார்க் ஆண்டனி திரைப்படம் இதுவரை ரூ.100 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைக் கொண்டாடும் வகையில் மார்க் ஆண்டனி படத்தின் வெற்றி விழா, இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ஆதிக் ரவிச்சந்திரன், தயாரிப்பாளர் வினோத் குமார், நிழல்கள் ரவி, இப்படத்தில் சில்க் வேடத்தில் நடித்த விஷ்ணுப்பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து மார்க் ஆண்டனி படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசியபோது, “ஒரு நல்ல இயக்குநர் கதை சொல்லும்போது பெரிய நடிகர்கள் ஒத்துக் கொள்வார்கள். ஆனால், எனது முந்தைய படம் சரியாக ஒடவில்லை. ஆனால், அதை பற்றி எதுவும் நினைத்துக் கொள்ளாமல் விஷால் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டார். தயாரிப்பாளர் வினோத் எனக்கு மோசமான படங்களை எடுத்துள்ள இயக்குநர் என்ற பெயர் இருந்தும், என்னை நம்பி ரூ.55 கோடி இந்த படத்திற்காக செலவு செய்துள்ளார்.