சென்னை: சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் அறிமுக இயக்குநர் மாலதி நாராயன் இயக்கத்தில், நடிகை ரேகா நடிப்பில் உருவாகி உள்ள "மிரியம்மா" படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேடையில் பேசிய ரேகா, ‘இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.
நான் நடித்ததில் யாருமே மறக்க முடியாத கதாபாத்திரம்தான் ஜெனிபர் டீச்சர். இந்த நேரத்தில், அந்த படத்தின் இயக்குநர் பாரதிராஜாவிற்கு நன்றி சொல்கிறேன். கடலோர கவிதைகள் போல பல படங்களில் நடித்துள்ளேன். அதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் அதிகம் பேசப்பட்டது. அந்த கதாபாத்திரத்தின் பெயர் சொல்லி பேசும்பொழுது அதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
இந்த படத்தில் நான் ஏற்று நடித்துள்ள மிரியம்மா கதாபாத்திரம், எனக்கு மிகவும் பிடித்திருந்தது. காரணம் கதை சொல்லும் பொழுதே, அதில் ஏதோ ஒரு தாக்கம் இருந்ததை உணர்ந்தேன். என்னைப் பொறுத்தவரை மாமா, மச்சான் என சினிமாவில் சொன்னால் நம்ப மாட்டேன்.