புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ‘கெத்துல’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று(ஆக.9) நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது, "சிறு முதலீட்டு படங்கள் வெற்றி பெற்றால் திரையுலகம் வளரும், தொழிலாளர்கள் வாழ்வார்கள். 'கெத்துல..!' கெத்தாக இருக்கிறது. இந்தக்குழு வெற்றி பெற்றால் மீண்டும் படம் தான் எடுப்பார்கள். தயாரிப்பாளர் மிகுந்த நல்ல குணம் படைத்தவர். நல்லதொரு ஆக்ஷன் படமாக இது உருவாகியுள்ளது.
இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துகள். தமிழ்நாட்டில் ஹீரோக்களுக்கு 60 விழுக்காடு சம்பளம் கொடுக்கும் அவலம் இருக்கிறது. இது தீர வேண்டும். இப்படி எடுத்தால் எப்படி ஓடும். தயாரிப்பாளரை வாழ வைக்காவிட்டால் சினிமா வாழாது. இந்தப்படம் போல் சின்ன படங்கள் ஓட வேண்டும், வாழ்த்துகள்" எனப் பேசினார்.
இதில் கலந்து கொண்ட பாடலாசிரியர் சினேகன், “இந்தப்படத்தில் என் பங்களிப்பு இல்லாவிட்டாலும் நட்புக்காக அழைத்தமைக்கு நன்றி. திறமையிருந்தும் அங்கீகாரத்திற்காக முயற்சிப்பவர்களின் படம் இது.