ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர் ரமணா, நந்தா இருவரும் இணைந்து தயாரித்து வரும் ஆக்ஷன் படம் தான் ‘லத்தி’. இதன் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத்தில் நடந்தது.
68 நாட்கள் ஆக்ஷன் காட்சிக்காக மட்டும் படப்பிடிப்பு நடைபெற்றது. சென்னையில் நடந்த ஒரு காட்சியில், படத்தில் கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்னால், படம் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் இடத்தில், விஷாலின் மகனை கடத்தி விடுகிறார்கள். என்ன செய்வதென்று கலங்கி நிற்க வேண்டும். இதுதான் சார் சீன் என்று விஷாலுக்கு சொல்கிறார் டைரக்டர்.
‘எனக்கு உடனே ஞாபகத்துக்கு வந்தது. அவன் இவன் படத்துக்கு டைரக்டர் பாலா சார் சொன்ன பல காட்சிகள் மனதில் வந்தது. அந்த எமோஷன் இந்த இடத்துக்கு சரியாக இருக்கும் என்று நினைத்தேன். உடனே டைரக்டரை கூப்பிட்டு,
’நான் ஒரே டேக்கில் நடித்து விடுகிறேன்.