கரூர் மாவட்டம், சட்டப்பேரவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் கஸ்தூரி என. தங்கராஜ், மார்ச் 24ஆம் தேதி இரவு கரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கரூர் கோவை சாலையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது சாலையில் இருபுறமும் உள்ள வர்த்தக நிறுவனங்களில் பணிபுரிவோர் மற்றும் வாடிக்கையாளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
பின் கரூர் கோவை சாலை உள்ள ரெட்டிபாளையம் புதூர் பகுதியில் செயல்பட்டுவரும் ஒரு பிரியாணி கடைக்குள் புகுந்த தேமுதிக வேட்பாளர் அங்கு கடைக்காரரின் அனுமதிபெற்று சில்லி சிக்கன் சமைத்து அங்குள்ள வாடிக்கையாளர்களுக்கு பரிமாறினார். அப்போது குடும்பத்தோடு அங்கு உணவருந்திக் கொண்டிருந்தவர்களிடம், “நீங்கள் விரும்பும் உணவை தேர்வு செய்வதை போல கரூர் தொகுதியில் நல்ல வேட்பாளரை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.