தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

சிற்றுண்டி உணவகத்தில் உணவருந்தி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு! - elections news

ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர் கே.பழனி சாலையோர சிற்றுண்டி உணவகத்தில் காலை உணவருந்தி சிறு வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார்.

அதிமுக வேட்பாளர் கே.பழனி
அதிமுக வேட்பாளர் கே.பழனி

By

Published : Mar 30, 2021, 2:03 PM IST

தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் வேட்பாளர்கள் அனைவரும் அனல் பறக்க சூறாவளி பரப்புரையைக் மேற்கொண்டு வருகின்றனர்.

அதிமுக வேட்பாளர் கே.பழனி
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தனி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே. பழனி இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். அதையொட்டி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அவர் இன்று காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரப்புரைக் மேற்கொண்டார்.
அப்போது, எளிய முறையில் மக்களோடு மக்களாக சாலையோர சிற்றுண்டி உணவகத்தில் இன்று (மார்ச் 30) காலை ஸ்ரீபெரும்புதூர் தனி தொகுதி அதிமுக வேட்பாளர் கே. பழனி உணவருந்தி சிறு வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார்.
அவருக்கு கூட்டணிக் கட்சியினரும், பொது மக்களும் உற்வாக வரவேற்பை அளித்தனர். வாக்கு சேகரிப்பில் அதிமுக, பா.ம.க, பா.ஜ.க மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details