தமிழ்நாடு

tamil nadu

வாகன சோதனையில் சிக்கிய இளைஞர்... பல லட்சம் மதிப்பிளான வாகனங்கள் பறிமுதல்...

By

Published : Aug 20, 2022, 8:03 AM IST

Updated : Aug 20, 2022, 9:33 AM IST

கருங்குளம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், பல நாள்களாக இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டிருந்த இளைஞரை பிடித்து, அவரிடம் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிளான ஏழு வாகனங்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

bike theft  youth arrested  youth arrested for involved in bike theft  youth arrested for bike theft  வாகன சோதனையில் சிக்கிய இளைஞர்  பல லட்சம் மதிப்பினாக வாகனங்கள் பறிமுதல்  வாகன திருட்டு  இருசக்கர வாகன திருட்டு  வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர்  வையம்பட்டி காவல் நிலையம்
வாகன திருட்டு

திருச்சி: வையம்பட்டி காவல் நிலையத்தில் கடந்த சில நாள்களாக இருசக்கர வாகனம் திருட்டு தொடர்பான புகார்கள் எழுந்த வண்ணம் இருந்துள்ளது. அதனடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 19) இரவு, கருங்குளம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த கவரப்பட்டியைச் சேர்ந்த காளிதாஸ் ( 21 ) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறி இருசக்கர வாகனங்களைத் திருடியதை காளிதாஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து அவரிடமிருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிளான ஏழு இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அந்த இளைஞரை நீதிமன்றம் முன் நிறுத்தி, 15 நாட்கள் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வையம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: Video... மின்பகிர்மான உதவி செயற்பொறியாளர் லஞ்சம் பெறுவதாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

Last Updated : Aug 20, 2022, 9:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details