தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 12.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல், இருவரை கைது செய்து குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை தமிழ்நாடு - ஆந்திர மாநில எல்லை உள்ள திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வழியாக ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு டிஜிபி ஆபாஸ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
டிஜிபி உத்தரவின் பேரில் குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்ட் ஸ்டாலின் மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணன் தலைமையில் திருவள்ளூர் குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் நந்தினிஉஷா மற்றும் போலீசார் கவரப்பேட்டை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.