தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

போஸ்டர் ஒட்டிய பாஜக, அதிமுக மீது வழக்கு!

தேர்தல் நடத்தை விதிகளை மீறி போஸ்டர், பதாகைகள் வைத்ததாக, பாஜக, அதிமுக நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

By

Published : Mar 2, 2021, 1:28 PM IST

தேர்தல் விதியை மீறி போஸ்டர்: பாஜக, அதிமுக மீது வழக்கு!
தேர்தல் விதியை மீறி போஸ்டர்: பாஜக, அதிமுக மீது வழக்கு!

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அண்மையில், இதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. தேர்தல் நடத்தை விதிகள் கடைபிடிக்கபடுகிறதா என, மாவட்ட, மாநில அளவில் பறக்கும் படையினர் தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில், சிந்தாதிரிபேட்டை பின்னிரோடு கூவம் பாலம் சுவரில் அதிமுக கட்சி சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. இதனை கண்ட பறக்கும்படை அலுவலர்கள் போஸ்டரை அகற்றி, தேர்தல் விதிகளை மீறி போஸ்டர் ஒட்டிய அதிமுக பிரமுகரான சீனிவாசன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதே போன்று அண்ணா சாலை ரஹாஜா டவர் அருகேயுள்ள பாஜக அலுவலகம் முன்பு பாஜக பெயர் பதாகைகள் வைத்திருந்ததாக, அக்கட்சி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...ஸ்டாலினை எதிர்த்துக் களம்காணும் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்?

ABOUT THE AUTHOR

...view details