ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், பவானி ஆற்றுப்பாலம் அருகே ஆற்றங்கரையோரம் படித்துறையை ஒட்டியுள்ள வரசித்தி விநாயகர் கோயில் முன்பு கடந்த மாதம் பிப்.21ஆம் தேதி தலையில் ரத்தக் காயங்களுடன் 20 வயதுள்ள ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து காவல் துறையினர் விசாரித்தபோது, கொல்லப்பட்ட நபர் சத்தியமங்கலம் கோட்டு வீராம்பாளையத்தை சேர்ந்த உணவகத் தொழிலாளி அப்துல் ரஜாக் (20) எனத் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைத்து காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில் அப்துல் ரஜாக் கொலை வழக்கில் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள, திருப்பாசேத்தியைச் சேர்ந்த விமல் (31) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். திருப்பாச்சேத்தியைச் சேர்ந்த விமல் வீட்டை விட்டு வெளியேறி, கடந்த பத்து ஆண்டுகளாக ஆங்காங்கே தங்கி தனக்குக் கிடைத்த வேலையை செய்து வந்துள்ளார். கடந்த மாதம் சத்தியமங்கலம் வந்த விமல், வரசித்தி விநாயகர் கோயில் முன்பு தங்கி கிடைத்த வேலைக்கு சென்று வந்துள்ளார்.