சித்திபேட்: தெலங்கானா மாநிலம் சித்திபேட் மாவட்டத்தில் உள்ள தொகுடா மண்டலம் குடிகண்டுலா கிராமத்தைச் சேர்ந்தவர் சியாமளா (19). இவருக்கும் துப்பாக்க மண்டல் சின்ன நிஜாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கோனபுரம் சந்திரசேகர் (24) என்பவருக்கும் 2022ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
இந்தத் திருமணத்தில் சியாமளாவுக்கு விருப்பம் இல்லை. பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் சம்மதித்துள்ளார். ஏனெனில் சியாமளா ஏற்கனவே சிவக்குமார் (20) என்ற இளைஞரை 3 ஆண்டுகளாக காதலித்துவந்துள்ளார். இதையடுத்து சியாமளா ஏப்.19ஆம் தேதி உணவில் விஷம் வைத்து சந்திரசேகரை கொல்ல முயன்றுள்ளார்.
இதையறியாத சந்திரசேகர் உணவு ஒவ்வாமை என நினைத்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளார். இதைத் தொடர்ந்து, ஏப்.28 சந்திரசேகரை கோவிலுக்கு செல்லலாம் என இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் தனியாக இருக்கலாம் என ஆள்ஆரவாரமற்ற காட்டுப் பகுதிக்கு கூட்டிச் சென்றுள்ளார்.