ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் உள்ள பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணிபுரியும் ஹபீப் முகமது என்பவர் தன்னிடம் பயிலும் மாணவிகளிடம் செல்போனில் ஆபாசமாகப் பேசி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்தனர்.
இதன்பேரில், ராமநாதபுரம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேசியஸ் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் முதுகுளத்தூர் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர், அனைத்து மகளிர் காவலர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதிசெய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆசிரியர் ஹபிப் முகமது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் கைதுசெய்யப்பட்டார்.
தகவல் எண்கள்
பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட மாணவிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்குத் தகவல் அளிக்கலாம்.
காவல் கண்காணிப்பாளர் - 9498129498,
காவல் கூடுதல் கண்காணிப்பாளர் - 9443282223,